கிறிஸ்தவ குடும்பங்களின் சிறந்த மாதிரிகை - திருக்குடும்பம்

அன்பிலும் அனுசரணையிலும் மரியாதையிலும் கிறிஸ்தவ குடும்பங்கட்கு ஒரு மாதிரிகையாக விளங்குமாறு இறைவன் ஒரு குடும்பத்தை உலகுக்கு அளித்தார். நசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பமே அந்த மாதிரிக் குடும்பம். உலகப் பார்வையில் தரித்திரக் கோலத்தில் காட்சி அளித்த இச்சிறு குடும்பம் விண்ணக ஐசுவரியங்களால் நிறைந்து துலங்கியது. மனித நோக்கில் மறைந்ததும் அறியாததுமாக இருந்த போதிலும் வானதூதர்கள் அத்திருக்குடும்பத்தை வாழ்த்தி வணங்கினர்.

மரியன்னையும், சூசையப்பரும் அன்பும் வாழ்வும் நிறைவாக ஒன்றித்த வாழ்வை மேற்கொண்டனர். இவ்வரிய சூழலில் இறைவனுக்கும் மனிதருக்கும் முன்பாக இயேசு ஞானத்திலும் வயதிலும் வளர்ந்து வந்தார், இத்திருக்குடும்பத்தின் இல்வாழ்வு மேடுபள்ளங்கள் நிரம்பியதோர் நீண்ட பயணமாகும். இறைவன் மட்டிலும் ஒருவர் மற்றவர் மட்டிலும் கொள்ள வேண்டிய விசுவாசத்துக்கு எதிராகப் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

மரியாளைப் பற்றிய சந்தேகமும் ஐயுறவும் சூசையை வாட்டி வருத்திய போதும், மறைபொருளாய் அமைந்த மனிதாவ தாரத் திட்டத்தை எண்ணி மரியாள் மெள னத்தில் ஏங்கித் தவித்த போதும், இறைவன் தலை யிட்டு அச்சங்கள் அனைத்தையும் அகற்றி, ஐயுறவை நீக்கி, மறைபொருளை வெளிப்படுத்தினார். ஏனெனில் சூ ன ச நீதிமானாகவும் மரியாள் இறைவார்த்தையில் விசுவாசம் கொண்டவளாகவும் விளங்கினர்.

மிகப் பயங்கரமான பிரச்சனைகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. செசாரின் குடிமதிப்பு ஆணைக்கு அடிபணிந்து பெத்லகேம் சென்றனர். முன் னறிந்திராத எகிப்து நாட்டுக்கு இரவோடிரவாக பய ணம் செய்தனர். ஜெருசலேம் ஆலயத்தில் இயேசுவை இழந்து தவித்தனர். நாசரேத்தில் தச்சுத் தொழிலாளி யின் சாதாரண வருவாயில் ஏழ்மையின் பிடியில் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். இச் சந்தர்ப்பங்களிலெல்லாம் மரி சூசை தம்பதிகள் இறைவனின் திருவுளத்துக்கு அன்போடு பணியும் பண்புள்ள கணவன் மனைவியாக பாசம் நிரம்பிய அன்னை தந்தையாக விளங்கினர்.

இத்திருக் குடும்பத்தில் உருவான இல்லத் திருச் சபை கிறிஸ்துவின் மீட்புப் பணியாக பிரவாகித்து அனைத்துலகுக்கும் பரந்து செல்கின்றது. இவ்வன்புத் தம்பதிகள் தம் அறநெறி வாழ்வின் சன்மானமாக பெற்றுக் கொண்டவை எம்மால் என்றுமே மனதிலி ருத்திக் கொள்ள வேண்டியவை. இயேசுவினதும் மரி யாளினதும் அரவணைப்பில் நல்மரணம் அடையும் பேறு சூசைக்குக் கிடைத்தது. மரியாள் கல்வாரிவரை தைரி யத்துடன் சென்று சிலுவையடியில் உறுதியுடன் நின்று இயேசுவுடன் துணை மீட்பர் ஆனாள்.

வாழ்வின் வழியில் சுகதுக்கங்கள் சூழ்ந்து வரும் போது இத்திருக் குடும்பத்தினை நோக்க வேண்டியது கிறிஸ்தவ குடும்பங்களின் தலையாய கடமையாகும். திருக்குடும்பத்தில் நிலவிய நம்பிக்கையும் உறுதியும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கிறிஸ்தவ குடும்பங் கட்கு அத்தியாவசியம் தேவைப்படும். இயேசு, மரி, சூசையிடம் விளங்கிய புண்ணியங்களைக் கிறிஸ் தவ கு டும் பங்கள் கைக்கொண்டு, இறைபணியிலும், மக்கள் பணி யிலும் சிறந்து விளங்குவார்களாக. இ ந் த உன்னத அப்போஸ்தலப் பணியால் கிறிஸ்துவின் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற உதவுவார்களாக.

ஆமென்.

கிறிஸ்தவ திருமணம், கிறிஸ்தவ குடும்ப வாழ்வு, அப்போஸ்தலம் என்பதற்கு ஆயத்தம்

திருச்சபையிலும் உலகிலும் கிறிஸ்தவ குடும்பங் கள் ஆற்றும் பணி, மணமக்களுக்கு அளிக்கப்படும் தூர அல்லது நெருங்கிய திருமண ஆயத்தங்களிலேயே பெருமளவு தங்கியுள்ளது. திருத்தந்தை பதினோராம் பத்திதாதர் கூறுகின்றார்:

' 'உறுதியானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஒரு குடும்ப வாழ்க்கை அல்லது சிதைவுகள் நிரம்பிய, கவலைகள் மலிந்த ஒரு துன்ப வாழ்க்கை - பிள்ளைப் பருவத்திலும் குமரப் பருவத்திலும் இடப்படும் அத்திவாரத்தைப் பொறுத்துளதென்பது எவரும் மறக்கமுடியாததொன்று. மணவாழ்வின் முன்னர் தன்னலத்துக்கும் உணர்ச்சிகட் கும் அடிமைகளாய் இருந்தோர் திருமணத்தின் பின் னரும் அதே குறைகளுடன் இருப்பர் என எண்ணுவது சரியானதே. எனவே, இளைஞர்களும் யுவதிகளும் திரு மண வாழ்வின் சிலுவைகளைச் சுமப்பதில் ஒருங்கிணைந்த, ஒருவருக்கொருவர் உறுதுணையாய் விளங்கத்தக்க பயிற் சிகளைப் பெறுதல் அவசியம். அதன் மேலாக கிறிஸ்து வின் நிறைவில் ஆன்மீக வ ள ம் பெற்று, முடிவற்ற வாழ்வை அடையும் வண்ணம் அவர்கள் வழிநடத்தப் படல் வேண்டும். இது சிறார் ம ட் டி ல் ஈடுபாடுள்ள, இறைவிருப்புக்கமைந்த பெற்றோராக அவர்களை ஆக் கம். > > கல்வி பற்றிய தமது சுற்றுமடலில் கூறப்பட்ட எச்சரிக்கையை நினைவூட்டுகிறார் திருத்தந்தை பதினோ ராம் பத்திநாதர்: குழந்தைப் பருவத்திலிருந்தே தீய நாட் டங்களை நசுக்கவும், நல்லனவற்றை வளர்க்கவும் ஊக்கு விக்க வேண்டும். மேலாக, இறையருளின் துணையுடன் திருமறைச் சத்தியங்களை உள்ளத்தில் பதித்து உறுதிப் படுத்துதல் நம் கடன். அன்றோல் அ வர் க ள் தம் சொந்த ஆவல்களை அடக்கியாள முடியாதவர்களாக, திருச்சபை அளிக்கும் போதனையினாலும் பயிற்சியினாலும், நிறைவான --- திருப்திகரமான பயனை அடைய முடிபா தவர்களாக, இருப்பர். திருச்சபையானது மக்கள் சமு தாயத்துக்கு நற்பயனையளிக்கவல்ல ஆ சி ரி ம ய ய ா க விளங்க வேண்டுமென்ற உயர் நோக்குடனேயே இறை வன் பரிசுத்த சத்தியங்களையும் திருவருட் சாதனங்க ளையும் அதற்கு அருளியுள்ளார்'' ( Divini illius Magistri)

தனக்கு ஏற்ற துணைவர் அல்லது துணைவி ஒருவரைத் தெரிந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துவதே திருமணத்திற்கான நெருங்கிய முன்னேற்பாடுக ளுள் முதன்மையானது. மணவாழ்வின் மகிழ்ச்சி அல் லது மகிழ்ச்சியற்ற வாழ்வு என்பது தனது துணைவனுக்கு அல்லது துணைவிக்கு உற்ற துணையாக அல்லது துயரத்தின் நிழலாக ஒருவர் வாழ்வதிலேயே தங்கியுள் ளது. ஒரு விவேகமற்ற தெரிவு வாழ்வின் இறுதி வரை துயரக்கடலில் தத்தளிக்கும் நிலையையே கொண்டு வரும். ஆகவே திருமணத்திற்கு ஆயத்தமாவோர் முதலில் தாம் தெரிவு செய்பவர் இறுதி வரை இல்லற வண்டியைத் தம்முடன் இணைந்து இழுத்துச் செல்லக் கூடியவரா என்பதை மிக்க கவனத்துடன் சிந்திக்க வேண்டும். இச்சிந்தனையின் போது இறைவனுக்கும் கிறிஸ்துவின் திருமறைக்கும் முதலிடம் கொடுத்தல் வே ண் டு ம். அடுத்து தம்மைப்பற்றியும் தமது எதிர்கால சந்ததி யைப் பற்றியும், மனித சமுதாயம் - தமது நாடு பற் றியும் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளல் வேண்டும். தம் திருமணம் இவர்களனைவருக்கும் பயன்தரு கருவியாக விளங்குமா என்பதைச் சீர் தூக்கிப் பார்த்தல் பயனுள் ளது. கிறிஸ்துவ விவேகத்துடன் தங்கள்  ெத ரி  ைவ எடுப்பதற்கு தாழ்மை மிகுந்த உள்ளத்துடன் இறை வனை வேண்டுவார்களாக. தகாத தன்னிச்சையான நாட் டங்கள், பணவிருப்பு, வேறு சில்லறைக் காரணங்கள் அனைத்தையும் மனதிலிருந்து அகற்றி தம் துணையாகத் தெரிந்தெடுப்பவர் மீது கொண்டுள்ள நேர்மை, உண்மை மிக்க பாசத்தினாலும் அன்பினாலும் வழி நடத்தப்படு வார்களாக. இறுதியாக தம் அன்னை த ந் தை ய ரி ன் ஆலோசனைகளுக்கும் புத்திமதிகட்கும் மதிப்பளிப்பார்க ளாக. வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த அன்னை தந்தையரின் ஆலோசனைகளும் வழிநடத்தல்களும் ஏற் றுக் கொள்ளப்படுமானால், பின்னர் அவல நி லை க் கு ஆளாக வேண்டியதில்லை என்பதையும் இளம் தலைமுறை யினர் உணர்வார்களாக.'' (Casti Connubii n. 118-121)

கிறிஸ்தவ திருமணம் ஒரு நிரந்தரக்கூட்டுவாழ்க்கை என்பதனால் திருச்சபையானது அதில் ஈடுபட விரும்பு வோரை அதிக கவனத்துடன். வழி நடத்துகிறது.

பொதுவாக கத்தோலிக்கர்கள் ஒரு குருவினதும் இரு சாட்சிகளினதும் சமுகத்திலேயே திருமணத்தை நிறைவேற்றலாம். ஒரு திருமணம் திருச்சபைச்சட்டங் கட்கு இணங்குகின்றதா என்பதைக் கவனிப்பதுடன், திருமண உடன்படிக்கையின் நோக்கம், பொறுப்பு, அத்திருவருட் சாதனத்தின் முக்கியத்துவம் என்ற அம் சங்களை மணமக்கள் நன்கறிந்துள்ளார்களா என்பதை நுணுக்கமாக ஆராய வேண்டியதும் குருவின் தலையாய கடமை. (திருச்சபைச் சட்டம் 1035 - 1080 , 1864). அப்போதுதான் இறையருள் நிரம்பியவர்களாக மண மக்கள் புனிதமான இல்லற வாழ்வினுள் நுழையமுடியும்

திருச்சபையிலும் அனைத்துலகிலும் அப்போஸ்தல பணியை ஆற்றுவதற்கான ஆயத்தங்கள் கி றி ஸ் த வ குடும்பங்கட்கு அவசியம் தேவைப்படுகின்றன. ''பாலப் பருவக் கல்வியிலிருந்தே அப்போஸ்தல பணிக்கான அத்திவாரமிடப்பட்டு, பயிற்சி ஆரம்பிக்கப்படல் வேண் டும்'' என இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுகின்றது. ஆகவே வளரும் பருவத்தினரும் வாலிப சமுதாயத்தினரும் அப்பேஸ் தலபணியிலே இறங்கி அதன் உணர்விலே நிறைந்திருப்பார்களாக. வாழ் நாள் முழுவ தும், பொறுப்புக்களை அவ்வப்போது கையேற்றுச் செவ் வனே நடத்தும் வண்ணம் இப்பயிற்சி அவர்கட்குச் செவ்வனே அளிக்கப்படல் வேண்டும். ஆகவே கிறிஸ் தவ கல்வியைப் போதிக்கக் கடமையுடையோர் அனை வரும் அப்போஸ்தல பணிக்கான பயிற்சியை வழங்கவும் கடமைப்பட்டோராவர் என்பது தெளிவு.

மனித சமுதாயத்தின் மீது இறைவன் வைத்துள்ள அன்புப் பெருக்கை, பாலப் பருவத்திலிருந்தே தம் குழந்தைகள் அறியவும் உணரவும் செய்வது கிறிஸ்தவ பெற்றோரின் தலையாய கடன். அடுத்து அயலவரின் உடல் உளத் தேவைகளில் அக்கறை காட்டும்படி தம் செயல்களால் வழிநடத்துவது பெற்றோரின் பணியா கும். அப்போது குடும்ப வாழ்வு முழுவதும் அப்போஸ் தல பணிக்கு பயிற்சியளிக்கும் ஒரு களமாய் அமை யும்.'' (A. A. 1, 30)

இன்றைய உலகில் கிறிஸ்தவ குடும்பத்தின் பணி

''கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையேயுள்ள அன்பு ஒப்பந்தத்தின் சாயலும், பங்கு கொள்ளலுமான திருமணத்திலிருந்து, கிறிஸ்தவ குடும்பம் தோன்றுகின் றது. எனவே, மீட்பர் உயிருள்ள முறையில், நம்முடன் இருக்கின்றார் என்பதையும், திருச்சபையின் உண்மை இயல்பையும் மணமக்களின் அன்பினாலும் இனப்பெருக்க வளமையாலும், ஒற்றுமைப் பிரமாணிக்கத்தாலும் எல்லா உறுப்பினருடையவும் அன்புள்ள ஒத்துழைப் பாலும், கிறிஸ்தவக் கிடும்பம் வெளிப்படுத்துவதாக''. (இ. உ. தி. இல. 48) (Harmanae Vitae n. 25 ஐயும் பார்க்க .)

''திருமணப் பிணைப்பு தூய்மையானது, பி ரி க் க முடியாதது எனத் தங்கள் வாழ்க்கையாலேயே வெளிப் படுத்தி எண்பிப்பதும், கிறிஸ்தவருக்கேற்ற முறையில் பிள்ளைகளை வளர்ப்பதும் பெற்றோர் அல்லது காப்பாள் ரின் உரிமையும் கடமையும் ஆகுமென வன்மையாய் வலியுறுத்துவதும், குடும்பத்தின் முறையான தன்னாட்சி உரிமையையும் மாண்பையும் பாதுகாப்பதும், மணமக் களின் கடமையாக என்றும் இரு ந் து வந்துள்ளது. இன்றோ இது அவர்களது அப்போஸ்தல ப ணி யி ன் பெரும் பகுதியாக மாறிவிட்டது. அவர்களும், மற்ற கிறிஸ்தவ விசுவாசிகளும் நன்மனத்தோர் யாவரோடும் ஒத்துழைப்பார்களாக. இவ்வாறு இவ்வுரிமைகளை அர சியல் சட்டங்களும் பழுதின்றி பாதுகாக்கும் படி செய்ய லாம். உறைவிடம், பிள்ளைகளின் வளர்ப்பு, உழைப்பின் நிலைமை, சமூகப் பாதுகாப்பு, வரிகள் ஆகிய குடும்பத் தேவைகளை, சமூகத்தை ஆளுவோர் கருத்தில் கொள்ளச் செய்யலாம். குடிபெயர்வோரைப் பற்றி ஒழுங்கு செய்யும் போது, அவர்களின் குடும்ப வாழ்க்கை முழுவதும் - பாதுகாப்புடன் இருக்கச் செய்யலாம்.

சமுதாயத்தின் முதல் உயிரணுவாயிருக்க வேண்டும் என்ற இந்தப் பணியை இறைவனே குடும்பத்திற்கு அளித்திருக்கிறார். குடும்ப உறுப்பினர் ஒருவருக் கொருவர் காட்டும் பற்றாலும், அவர்கள் ஒன்றாய்க் குழுமி கடவுள் பால் எழுப்பும் செபத்தாலும், திருச் சபையின் இல்லத் திருவிடமாய் இக்குடும்பம் விளங்கு வதாலும், திருச்சபையின் இறை பணியில் குடும்பம் முழுவதும் கலந்து கொள்வதாலும், இறுதியாக விருந் தோம்பும் குடும்பமாகத் தன்னையே காட்டுவதாலும், தேவையுறும் சகோதரர் அனைவரின் தேவைக்காக நீதி யையும், பிற நற்செயல்களையும், ஊக்குவிப்பதாலும் இப்பணியைக் குடும்பம் நிறைவேற்றும். குடும்ப அப் போஸ்தல பணியின் பல்வேறு வேலைகளுள் பின்வருவ னவற்றையும் குறிப்பிடலாம்: கைவிடப்பட்ட பிள்ளை களை எடுத்து வளர்த்தல், முன்பின் தெரியாதவருக்கு வாஞ்சையுடன் விருந்தோம்பல், பள்ளிகள்  ைவ த் து நடத்தத் துணை புரிதல், இளைஞர்க்கு அறிவுரையும், பொருளுதவியும் வழங்கல், திருமணம் புரிய விருப்ப முள்ளவர்கள் சிறந்த முறையில் திருமணத்திற்குத் தங் களை தயார் செய்ய உதவுதல், மறைக்கல்வி புகட்டுதல், பொருளாதார அல்லது ஒழுக்கப் பிரச்சினைகளில் சிக்கி யிருக்கும் மணமக்களையும், குடும்பங்களையும் காப்பாற் றல் போன்றவை; முதியோர்களுக்கு வாழ்வின் தேவை களை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாது பொருளா தார முன்னேற்ற நலன்களிலே சீரான முறையில் பங்கு பெற உதவி செய்தல்....... தம் அப்போஸ்தலத்துவ குறிக்கோள்களை இன்னும் எளிதில் அடைய, குடும்பங் கள் ஒரு சில குழுக்களாகக் கூடி இணைந்து கொள்வது மிக நலமாக இருக்கும்.

(பொ. நி. அப். இல. 11) (இ. உ. தி. இல. 52 ஐயும் பார்க்கவும்.

''எனவே தெய்வீகச் சட்டத்திற்குப் பிரமாணிக்க மாய் இருக்க தம்பதியர் செய்யும் தாராள முயற்சி யின் பல விளைவுகளில் முக்கியமானதொன்றேதெனில் தங்களது அனுபவத்தில் பிறரும் பங்குபெற வேண்டும் என்ற ஆர்வமாகும். இவ் வி த மா க ப் பொது நிலையி னர்க்கே உரிய அழைப்பில், தமக்கொத்தவர்க்குப் பணி புரிதல் என்னும் புதியதும், சிறப்பானதுமான ஒருவகை அப்போஸ்தன பணி இடம் பெறுகிறது. தம்பதியரே பிற தம்பதியருக்கு அப்போஸ்தலர்களாகவும் வழிகாட் டிகளாகவும் அமைகின்றனர் எத்தனையோ வகையான அப்போஸ்தலப் பணிகளில் இது தற்காலத்திற்கு மிக வும் ஏற்றதாகத் தோன்றுகிறது'' (Humanae Vitae n. 26)

''ஈற்றில், மனிதனின் தூய்மையை அழிப்பதும் மனித மகத்துவத்திற்குத் தீங்கு விளைப்பதும், வெட் கத்திற்குரியதும், கீழ்த்தரமானதுமான, இன்றைய மனி தனின் வாழ்க்கை முறையிலும், நாட்டின் நிர்வாகத் திலும். காணப்படும் தீங்குகளைத் தீர்த்து  ைவ க் க க் கூடிய ஒரோ வழிவகை - குடும்பங்கள் தங்கள் ஞான மேப்பரின் ஏவுதல் மூலமும், வழி நடத்தல் மூலமும் தமது இராசரீக கடமைகளை விளங்கிச் செயல்படுவதே யாகும்'' (Role of the Christian Family p. 45), இது தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் இடம் பெற வேண்டும்.. 

கிறிஸ்தவ குடும்பம் இறை மக்களுக்கு ஆற்றும் பணி

இறைவனது சொந்த மக்களின் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் கிறிஸ்தவ கு டு ம் ப ம் செயற்பட வேண்டுமென்ற பெரிய உண்மையை பெற்றோர் உணர் தல் அவசியம். ''இந்தத் திருவருட் சாதனத்தின் வல் லமையால் தங்களது திருமண வாழ்விலும், பிள்ளைக் ளைப் பெற்றெடுப்பதிலும், வளர்த்து உருவாக்குவதி லும், புனிதமடைய ஒருவருக்கொருவர் உதவுகின்றனர், இதனால் தங்கள் வாழ்க்கை நிலையிலும், பதவியிலும் இறை மக்களுள் இவர்கள் தமக்குரிய நன்கொடையைப் பெற்றுக் கொள்கின்றனர்.

ஏனெனில் திருமண இணைப்பால் உருவாகிறது குடும்பம்; இக்குடும்பத்தில் தான் மனித சமுதாயத்தின் புதுக் குடிமக்கள் பிறக் கின்றனர். காலங்களின் முடிவு வரை இறை மக்கள் குலம் நிலைத்து நிற்பதற்காக இவர்கள் பரிசுத்த ஆவி யின் அருளால் ஞானஸ்நானத்தின் மூலமாக இறைவ னின் பிள்ளைகளாக்கபடுகின்றனர். ஒரு வகையில் இல்லத் திருச்சபை என்று அழைக்கப் பெறக் கூடிய குடும் பத்தில் பெற்றோர் தமது சொல்லாலும் முன் மாதிரி யாலும் தங்கள் பிள்ளைகளுக்கு முதன் முதலில் விசு வாசத்தைப் போதிப்பவர்களாக இருப்பார்களாக. இன்னும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரித்தான அழைத் தலை அவர்கள் பேணிக்காக்க வேண்டும்.; தேவ அழைத் தலாக இருந்தால் அவர்கள் தனிப்பட்ட அக்கறையு டன் அதைப் பேணி வளர்க்க வேண்டும்.''

(திருச்சபை இல 11) (பொது நிலையினரின் அப் போஸ்தலத்துவம் இல 11 ஐயும் பார்க்கவும்)

தம் குடும்ப எல்லையைத் தாண்டி, உலகம் திருச் சபை ஆகிய சமூகங்களுக்குத் தம் உள்ளத்தைத் திறந்து வைக்குமாறு பிள்ளைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். இறைமக்களின் உயிருள்ள, செயற்படும் உறுப்பினராய் உள்ளனர் என்று உணரும் அளவுக்கு பங்கு எனும் சமூகத்தில் இவர்களும் ஏற்றுக் கொள்ளப்படுவார்களாக''

' (பொது நிலை அப். இல. 30)

"குடும்ப வாழ்வில் கணவன் மனைவியர் ஒருவ ரொருவர் முன்னிலையிலும், தம் மக்கள் முன்னிலையிலும் கிறிஸ்துவின் அன்பிற்கும் அவர் மேலுள்ள விசுவாசத் திற்கும் சாட்சிகளாக நின்று தமக்கேயுரிய அழைத்த லுக்கேற்ப வாழ்கின்றனர். கிறிஸ்தவக் குடும்பம் இறை யரசின் இன்றைய பண்புகளையும், வரவிருக்கும் இன்ப வாழ்வின் மேலுள்ள நம்பிக்கையையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது''

(சங்க ஏடு: திருச்சபை இல. 35)

கிறிஸ்தவ குடும்பத்தின் புனிதப்படுத்தும் பணி

''கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் நிலமையிலிருந்து எழும் கடமைகளுக்கும் மதிப்பிற்கும் ஏற்றவாறு வாழ தனிப்பட்டதொரு அருட்சாதனத்தின் வழியாக வலுப்பெறுகின்றனர்; ஒரு வகையில் திரு நிலைப்படுத்தப்படுகின்றனர். இந்தத் திருவருட்சாதனத்தின் ஆற்றலால் தங்களின் திருமண, குடும்பக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்களின் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் மனநிலையில் ஊறித் திளைத்தவர்களாய் அவர்கள் அதிகமதிகமாக, தங்களை நிறைவுடையவர் ஆக்குவதோடு ஒருவரொரு வரையும் புனிதப்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர்கள் சேர்ந்து கடவுளை மாட்சிப்படுத்துகிறார்கள்.

இப்படியாக குடும்பச் செபத்தாலும் முன்மாதிரி யாலும் பெற்றோர்கள் வழிகாட்டிச் செல்ல, பிள்ளைக ளும் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து வாழும் எல்லோ ருமே மனிதத்தன்மை , மீ ட் பு, புனிதத்தன்மையின் வழியை மிக எளிதாகக் கண்டு பிடிப்பார்கள். மணமக் கள் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் மேன்மை யையும் பணியையும் கொண்டிருப்பதால், முதன் முதல் அவர்களைச் சார்ந்த கல்வி ஊட்டும் கடமையை, முக் கியமாக மறைக்கல்வி புகட்டும் கடமையை கருத்துடன் நிறைவேற்றுவார்களாக.

குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர்கள் என்ற என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனி தமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். நன்றி உள்ளத்துடனும் அன்புடனும் நம்பிக்கையுடனும் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு  ைக ம ா று புரி வர்.'' (இன்றைய உலகில் திருச்சசை இல. 48) (சங்க ஏடு: திருச்சபை இல. 41 ஐயும் 25 ஐயும் Casti Connubii n. 38-42 ஐயும் பார்க்க வும்)

''திருமணத்தின் வழியாக, வாக்களிக்கப்பட்ட ஆவியின் அருள் குடும்பத்தில் இருக்குமிடத்து கணவன் மளைவியர், பெற்றோர், பிள்ளைகள், சகோதரர் மத்தி யில் அருளால் ஊக்குவிக்கப்பட்ட பல துறைகளிலும், இறை அன்பைப் புலப்படுத்தும், திருச்சபையின் செப். வாழ்வுக்கு இட்டுச் செல்லப்படுவர்'' (Role of the Christian Family P. 31). 

கிறிஸ்தவ குடும்பத்தின் கல்விப் பணி

கிறிஸ்தவ குடும்பத்தின் ஒரே அலுவல் அல்லது பணி கிறிஸ்துவை அறிவித்தலே எனத் திருத்தந்தை 6.வது சின்னப்பர் கூறுகிறார். மனுக்குலத்தின் பல்வேறு நிலையினர்க்கும் நற்செய்தியை அறிவித்தலும், தனது செல்வாக்கினால் மனித இனத்தை உருமாற்றி, புதுப் பித்தலுமே கிறித்தவ குடும்பத்தின் பணி யா கு ம். (Evangelii Nuntiandi n. 18)

''பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு உயிர் அளிக்கிறார் கள் என்பதால் அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டி யது அவர்களது தலையான கடமை. எனவே அவர்களே குழந்தைகளுக்கு முதன்மையான, முக்கியமான ஆசிரி பர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கல் விட்' பணி எவ்வளவு முக்கியமானதென்றால், இது நிறை வேற்றப்படாதிருக்கும் இடத்தில் வேறெதுவும் கொண்டு இதனை நிறைவு செய்வது மிகவும் கடினம். கடவுளுக் கும், மனிதருக்கும் காட்டும் அன்பாலும் பற்றாலும் உயிரூட்டப் பெற்றுள்ள குடும்பச் சூழ்நிலையை உருவாக் குதல் பெற்றோர்களுடைய கடமையாகும். இதனாற் குழந்தைகளின் தனி, சமூகக் கல்வியைக் குறையற நிறைவு செய்ய முடியும். குறிப்பாக, திருமணம் என்ற திருவருட் சாதனத்தின் அருளாலும் கடமையாலும் வளம் பெற்றுள்ள கிறிஸ்தவக் குடும்பத்தில் திருமுழுக் கால் அவர்கள் பெற்ற விசுவாசத்துக்குத் தக்கபடி கட வுளைக் கண்டுணரவும், அவரை வழிபடவும், பிறருக்கு அன்பு செய்யவும் பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலி ருந்தே கற்பிக்கப்பட வேண்டும்''.

(2ஆம் வத்திக்கான் சங்கம் : கிறிஸ்தவக் கல்வி இல. 3 )

"உயிருள்ள விசுவாசம் நிலை பெறச் சமூகத்தின் - உதவி வேண்டப்படுகிறது. எனவே, தம் பிள்ளைகளை பங்கு முயற்சிகளில் ஈடுபடுத்தும் பொறுப்பு பெற்றோர்க் குரியது. அவர்களது கல்வி வளர்ச்சிக்கும் ஆழ்ந்த விசு வாசத்துக்கும் தேவையான பயனுள்ள வேறு சமூக நிறுவனங்களிலும் ஈடுபாடுள்ளவர்களாகப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். (இன்றைய உலகில் கிறிஸ்தவ குடும்பத்தின் பணி ப. 32).

- சமூக வாழ்வில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாறு தல்களினால் கல்விப் பணியில் மேலும் சிரமங்களைக் குடும்பம் எதிர் நோக்க வேண்டுயுள்ளது. கல்வி நிறுவ னங்கள் தன்னாளுமையும் மனிதப் பண்பும், கிறிஸ்தவ உருவாக்கமும் கொண்ட நற்கல்வியை தனி ஆளுக்கு ஊட்டக்கூடிய நிலையில் இல்லை. எனவே, பாடசாலை வழங்க முடியாததை வழங்க வேண்டிய பொறுப்பு குடும்பத்தைச் சார்கிறது. மறைக்கல்வி ஊட்டலில் குடும்பத்தின் பங்கு அதிகமாகிறது. பச்சாத்தாபம், திருவிருந்து, உறுதிபூசுதல், எனும் திருவருட்சாதனங் களுக்கான ஆயத்தங்களில் பெற்றோரும் ஒன்று சேர வேண்டுமென்ற புதிய பரீட்சார்த்த முறைகள் பெற் றோரின் கடமைகளை இன்னும் அதிகமாக்குகின்றன. பள்ளிக்கு முந்திய பருவத்தில் சிறப்பான ம ன ற க் கல்வியை பெற்றோர் கொடுக்க வேண்டியவர்களாயிருக் கின்றனர். கல்விப் பணியில் பெற்றோர் தம் பிள்ளைக ளின் உதவியையும் சே ர் க் க வேண்டிய து அவசியம். (Role of the Christian Family P, 33-34)

திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பர் அண்மையில் கல்வி பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்து நோக்கற்பாலது. இளைஞர்க்கான கல்வியின் நோக்கம் அவர்களின் உரு வாக்கலில் உதவுதலும், கிறிஸ்தவ கண்ணோக்குடன் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ளச் செய் தலுமாகும். இவை மட்டில் அக்கறை இல்லாத அல்லது பகைமையுடைய் உலக போக்கை மாற்றிச் சமு தாயத்துக்குப் பணி செய்பவர்களாகவும், விசுவாசமுள் ளவர்களாகவும் அவர்களை ஆக்க வேண்டும். பெற்றோ ருடன் ஒன்றித்து திருச்சபையின் வாழ்வில் ஊக்கமுடன் பங்கு கொள்ளச் செய்தல் நம் கடமையாகும், . (Role of the Christan Family P. 34)