♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்ணகத்தின் சுடரே மண்ணில் வந்த நிலவே
மனிதத்தை மாற்றிட வா என் மனதினில் வாழ்ந்திட வா (2)
1. நீ எந்தன் வாழ்வோடு இணையும்போது இன்பங்கள் பெருகிடுமே
என் ஏற்றத்தாழ்வுகள் மறைந்திடுமே (2)
நானுன்னை என்னில் ஏற்கும்போது - 2
ஏக்கங்கள் நீங்கிடுமே என் ஏழ்மையும் மாறிடுமே
2. நான் எந்தன் வாழ்வில் அழியும்போது உறவுகள் மலர்ந்திடுமே
புதுவாழ்வும் வழியும் பிறந்திடுமே (2)
நான் உந்தன் வார்த்தையை வாழும்போது - 2
வருத்தங்கள் விலகிடுமே நல் அமைதி ஆட்கொள்ளுமே