♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பூ இமைகள் மூடி கண்ணுறங்கும் பாலன் யார்
பூவுலகை நாடி வந்திருக்கும் மைந்தனார்
முன்னிடையில் உள்ள புல்லணை உன் மஞ்சமானதோ
1. வானத்தின் மகிமையை விடுத்து வந்தனையோ
வையத்தின் சுமைகளை ஏற்க வந்தனையோ (2)
தந்தையின் ஆசையோ ஆஹா தந்தையின் ஆசையோ
பூ இமைகள் மூடி...
ஆரிராரிராரிராரோ நம்மை இரட்சிக்க வந்தாரோ
2. மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததும் ஏனோ
மாந்தர் குற்றங்களை மன்னித்ததும் ஏனோ (2)
தந்தையின் ஆசையோ ஆஹா தந்தையின் ஆசையோ
பூ இமைகள் மூடி... ஆரிராரிராரிரோ
நம்மை இரட்சிக்க வந்தாரோ
3. வானுடை நட்சத்திரம் துலங்கியதேனோ
ஏரோது இராஜனும் கலங்கியதேனோ (2)
இராஜன் நீரன்றோ யூதராஜன் நீரன்றோ - இமைகள் மூடி...