என் ஆன்மா எந்நாளுமே ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது


என் ஆன்மா எந்நாளுமே

ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

என் மீட்பரை நினைத்து நினைத்து

எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது (2)


1. ஏழைகளை எளியவரை உயர்த்தினார் - பல

இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் (2)

செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - 2 நெஞ்சில்

செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் - 2


2. அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்

ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் (2)

தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - 2 வாழ்வில்

வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் - 2