♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கொஞ்சிக் கொஞ்சி பேசும் பிஞ்சுக் குழந்தாய் - உன்னை
நெஞ்சில் அள்ளி அணைப்பேன் நீ வாராய் - எந்தன்
நெஞ்சில் வைத்து வளர்ப்பேன் நீ வாராய்
1. பாரினில் பிறந்திடும் மழலைகளை
பாசமாய் ஏற்றிட மறுப்பதும் ஏன்
கண்ணே மணியே கனியமுதே - உன்னை
கட்டி அணைப்பேன் என் நிரையில் - தமிழ்
கவிதையில் இசைப்பேன் உன் புகழை
2. பள்ளியில் பயிலும் வயதினிலே
பாலர்கள் ஆலைகள் செல்வதும் ஏன்
பஞ்சம் பசி பிணி போக்கிட - என்றும்
தஞ்சம் என உனைத் தேடிடுவேன் - எந்தன்
கண்ணின் மணியே ஆராரோ