♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஒரு பாடல் நான் பாடுவேன் மன்னன் உந்தன் கருணையை
எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து
நன்றிப் பாடல் நான் பாடுவேன்
1. ஒரு நாளில் நீ செய்த நன்மைகளைச் சொல்ல நினைத்தால்
வாழ்நாளே போதாதய்யா சொல்லியும் தீராதய்யா
நன்றி சொல்வேன் நாளெல்லாம்
உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்
2. என் அன்புத் தாயாக தந்தையாக எந்தன் இறைவா
எந்நாளும் எனைப் பார்க்கின்றாய் கண்ணாகக் காத்தாள்கின்றாய்
நான் நினைப்பேன் நன்றி சொல்வேன்
நாளெல்லாம் பாடிப் புகழ்வேன்