எந்தன் உள்ளம் வந்த தேவனே நன்றியோடு என்றும் பாடுவேன் உன்னையன்றி யாரைப் பாடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் உள்ளம் வந்த தேவனே

நன்றியோடு என்றும் பாடுவேன் -2 (2) இறைவா -5

உன்னையன்றி யாரைப் பாடுவேன்

நன்றி மலர் உனக்குச் சூடுவேன்


1. உன் பாதை நான் செய்யும் பயணங்களில்

தடைகோடி வரும்போது எனைத் தாங்கினாய் (2)

உனைப்போல நான் வாழத் துடிக்கின்ற வேளை -2

கரம் நீட்டி ஒளிகாட்டித் துணையாகிறாய்

அஞ்சாதே நெஞ்சோடு உனில் வாழவே - உன்னையன்றி ...


2. எனைச் சூழ்ந்த இருளெல்லாம் ஒளியாக்கினாய்

அருள் தந்து என் வாழ்வின் வழியாகினாய் (2)

கரைந்தோடும் படகாகத் தவிக்கின்றபோது -2

கலங்கரை விளக்காகச் சுடர்வீசினாய்

உயிராக உணவாக உறவாகவே - உன்னையன்றி ...