கருணை தெய்வமே கனிவாய் என்னில் வா வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா


கருணை தெய்வமே கனிவாய் என்னில் வா

வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா

உந்தன் விருந்திலே உள்ளம் மகிழுதே

உணவாய் எழுந்து வா


1. அன்பே உன் வரவின்றி அருளே உன் துணையின்றி

இருளில் நான் தள்ளாடுவேன்

உயிரே உன் உறவின்றி உலகில் உன் நிழலின்றி

துயரில் நான் கண்மூடுவேன் (2)

உயிரூட்டும் உணவாக வா வழிகாட்டும் விளக்காக வா

ஆன்மாவின் ஆனந்தமே ஆறாகும் பேரின்பமே


2. ஊர் தூங்கும் வேளை ஒளிதூவும் நிலவாய்

என் வாழ்வின் ஒளியாகினாய்

வழி பார்த்து கண்கள் நீர் கோர்த்து நிற்க

என் பாதை வழியாகினாய் (2)

என் தேவன் நீ இல்லையேல் என் உள்ளம் தடுமாறுமே

உன் பாதை நான் இல்லையேல் என் வாழ்வு வீணாகுமே