வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே

சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)


1. பன்னிரு வயதில் ஆலயத்தில்

அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை (2)

கரங்களை விரித்தே கள்வனைப் போல் -2

கழுமரத்தினில் கண்டதினால்


2. கண்ணீரே சிந்திய மனிதருக்கு

அருள் பண்ணிய திருமகனே (2)

மண்ணவர்க்காகத் தன்னுயிரை -2

இன்று மாய்த்திடக் கண்டதினால்