பாட்டுப்பாடி ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள் காக்கும் நல்ல தேவனவர் இரக்கமுள்ளவர்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பாட்டுப்பாடி ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்

காக்கும் நல்ல தேவனவர் இரக்கமுள்ளவர்

நல்லவரும் வல்லவருமாய் என்றும் அவர் இருப்பதினாலே (2)


1. செடியைப் பிரிந்த கொடியைப் போல நாமெல்லாம்

மடிந்து அழிந்து போயிடாமல் காத்திடுவாரே (2)

கடலில் தவித்த பேதுருவைப் போலே நாமும் -2

துன்பம் வந்தால் துயரம் வந்தால் இயேசுவை அழைப்போம்

நிரந்தரமாய் சந்தோசம் தந்திடுவாரே


2. வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம்தானே

என்று சொல்லி அவர் பாதம் பணிந்திடுவோம் நாம் (2)

சுமைசுமந்து சோர்ந்திருப்போர் விரைந்து வாருங்கள் -2

என்று சொன்ன இயேசுவை நாம் அணுகிச் செல்லுவோம்

சுகம் தந்து சமாதானம் தந்திடுவாரே