போற்றி போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏத்திப்பாடுதே ஆண்டவரை நெஞ்சம் பாடுதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


போற்றி போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏத்திப்பாடுதே

ஆண்டவரை நெஞ்சம் பாடுதே - என்னைக்

கண் நோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் -2

அந்த மீட்பரிலே மகிழ்ந்துப்பாடுதே பாடுதே


1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய்க் கொண்டார்

விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் (2)

தலைமுறையெல்லாம் என்னை வாழ்த்திடுமே - 2

தலைவனவர் திருநாமம் புனிதமாமே - 2


2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்

ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் (2)

செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச்செய்தார் - 2

பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார் - 2