கள்ளமில்லா ஒரு வெள்ளிநிலா என உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கள்ளமில்லா ஒரு வெள்ளிநிலா என

உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதாய்

தீராத பாசமே நறும் தேனான இயேசுவே

அன்பே பாரினில் நீயும் நானும் ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே

வாரும் தேவா வாருமே


1. எங்கே நோக்கினும் தனிமையே உனை என் மனம் மறந்ததேன்

தீமையே - கண்களும் நீரினில் ஆடுதே இறைக்

கர்த்தருன் பூமுகம் தேடுதே

தேவ தேவா சிலுவை நாதா திரும்ப நாவினில் வாருமே -2

தாகம் யாவும் தீருமே தூய வாழ்வைத் தாருமே

தாயும் நீயாய் சேயும் நானாய் வாழவேண்டும் நாளுமே


2. எல்லாம் தேவனின் மகிமையே அதை

எங்ஙனம் புகழ்வது ஏழையே

என் மனம் நீ வரும் போதிலே பெரும்

நிம்மதி ஆயிரம் வாழ்விலே

வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீ இனி தேவனே - 2

வாரும் நாவில் இயேசுவே நீயும் நானும் பேசவே

ஆயன் நீயாய் தோளில் நானாய் வாழவேண்டும் நாளுமே