விண்ணக விருந்தே வா வினை தீர்க்கும் மருந்தே வா என்னகம் எழுந்து வா மன்னவா மகிழ்ந்து வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விண்ணக விருந்தே வா வினை தீர்க்கும் மருந்தே வா

என்னகம் எழுந்து வா மன்னவா மகிழ்ந்து வா (2)

என்னுள்ளம் உமக்காக ஏங்கித் தேடுதே

என்னிடம் உள்ளதெல்லாம் வழங்கி மகிழவே (2)

இறைவா வாராய் வரமே தாராய் -2


1. அலைகடல் நடுவே அசைந்திடும் படகாய்

தவித்திடும் வேளையிலே

அருட்கரம் நீட்டி கரைதனில் சேர்த்து

நிலைபெற உயர்த்தி விட்டாய் (2)

காலங்கள் மாறினும் உம் அன்பு மாறாதய்யா - 2

ஜீவியம் தோறும் காவியம் பாட ஆவியைப் பொழிந்திட வா


2. உண்பது அப்பம் ஒன்றே ஆகினும் உண்பவர் ஆயிரமே

வேதங்கள் படித்து பேதங்கள் அகற்றி

நட்பினில் வளரச் செய்வாய் (2)

தோழமை உறவினிலே உள்ளதைப் பகிரச் செய்வாய் - 2

சமத்துவம் படைத்து சாட்சியாய் வாழ்ந்திட

உம் அருள் பொழிந்திட வா