பொழுது புலரும் நேரமிது தென்றல் தாலாட்டுப் பாடுது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பொழுது புலரும் நேரமிது தென்றல் தாலாட்டுப் பாடுது-2

பூத்தூவி வானவர் உன்னை வாழ்த்திப் பாடிட -2

புன்சிரிப்போடு துயிலும் பாலன் இயேசுவே ஆராரோ-2

ஆராரோ ஆரிரரோ 2


1. துன்பத்திலே துவண்டு வாழும் ஏழை உள்ளங்களே

பாவத்திலே பரிதவிக்கும் இறைவன் சாயல்களே (2)

கண்கலங்கிட வேண்டாம் உள்ளம் வருந்திட வேண்டாம் - 2

நல் கரம் கொடுத்து வாழவைக்க இயேசு பிறந்துள்ளார் - 2

ஆராரோ ஆரிரரோ - 2


2. உள்ளத்திலே இறைவன் அரசு உதயமாகட்டும்

நம் இல்லத்திலே இறைவன் அருள் வந்து தங்கட்டும்

உலகெத்திசையிலும் இறைமாட்சி ஓங்கட்டும்

உலக மாந்தர் அனைவரும் இறை அன்பில் வாழட்டும்

ஆராரோ ஆரிரரோ - 2