தீர்த்தத்தைத் தொட்டுச் சிலுவை வரைகிறபோது

சர்வேசுரா சுவாமீ! இந்த தீர்த்தத்தின் முயற்சியால் உம்முடைய திருக்குமாரனாகிய சேசுகிறீஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு, என் ஆத்துமத்தை கழுவி, என் பாவங்களைப் பொறுத்துப் பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் விலக்கி, உம்முடைய ஆசீர்வாதத்தை அடியேனுக்குத் தந்தருளும். ஆமென்.