மரணத்தருவாயில் செபம்

தயாபரராயிருக்கிற சேசுவே! என் தயாபர விசுவாசமே, என் சத்துவமே, என் நம்பிக்கையே, என் சிநேகமே, என் அன்பனே, சுவாமீ, இந்த மரணத்தருவாயிலே எனக்கு உம்முடைய திருக் கைகொடுத்து இரட்சியும். என்னுடைய நடத்தையைப் பார்த்தால் மிகவும் பொல்லாத நடத்தைதானே, அநேக தோஷ பாவங்களைச் செய்தேனே, மெய்தான். இப்போது அந்தப் பாவங்களினாலே வந்த கனதிமாத்திரம் இருக்குதல்லாமல் பின்னை ஒன்றுங் காணேன். உமது அளவிறந்த நன்மைத்தனம் என் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுமென்றும், ஒரு சிலுவை மரத்திலே நீர் சீவனை கொடுத்து மீட்ட என்னுடைய ஆத்துமத்தை நரகத்திலே விழவொட்டீரென்றும் நம்பியிருக்கிறேன். எனது பிரிய சேசுவே! நீர் என்னைப் புறக்கணித்து தள்ளி விட்டீரென்று நான் நினையேன். ஏனென்றால், நான் உம்முடைய தசையில் தசையு மாய், எலும்பில் எலும்புமாயிருக்கிறேன். நீர் மனுமகனாயிருக்கிறீர். என்னை உம்முடைய பிள்ளையென்று அழைக்கச்சித்தமானீரே. ஆகையால் நானும் உம்மை என் தகப்பனென்று அழைப்பதிலே சோர்வையடையாதபடிக்குப் பலத்த தைரியத்தைக் கொடும். என் சர்வேசுரனின் தாயே! இந்தமட்டும் எனக்கு இத்தனை உபகாரியாயிருந்த நீர் இத்தறுவாயிலே என்னுடைய நன்மையும், தின்மையும், பாக்கியமும், நிர்ப்பாக்கியமும், இரண்டிலொன்று கண்டு தீர்வையிடப்போகிற இவ்வேளையிலே உம்முடைய தயாப இரக்கத்தைக்காட்டும். தேவ நீதிப் பத்திராசனத்துக்கு முன் ஆத்துமங்களைக் கொண்டுபோய் விட்டு, சத்துருக்களிடத்திலிருந்து காத்து தயாபரிக்கும் பணியிலுள்ள அர்ச். மிக்காயேலே! என்னுடைய ஆத்துமத்தை உம்முடைய ஆதரவிலே வைக்கிறேன். எனக்குக் காவலான சம்மனசானவரே! எனக்குச் சகாயமாயிரும். பரலோக இராச்சியத்தில் வாழ்ந்திருக்கிற சகல அர்ச்சியசிஷ்ட வர்களே எனக்கு உதவியாக வாருங்கள். உங்கள் சகாயத்தினாலே நானும் இந்த மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகில் சேர்ந்து உங்களோடு கூட ஆண்டவரைச் சிநேகித்து வாழ்த்தும்படிக்கு வழிபாருங்கள், ஆமென்.