இராச் செபம்

Veni Sancte Spiritus

+ இஸ்பிரீத்துசாந்துவின் மந்திரம்

இஸ்பிரீத்துசாந்து வே, தேவரீர் எழுந்தருளி வாரும், பரலோகத்தினின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே, கொடைகளைக் கொடுக் கிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளிவாரும், உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தினரே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, களைப்பில் சுகமே, வெய்யிலிற் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயத்தின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச் செய்யும். குளிரோடிருக்கிறதைக் குளிர் போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம் விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்தத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.