நித்திரை ஒழுக்கம்

நீ நித்திரை செய்யப் போகையில் உன் படுக்கையைக் கல்லறையாக எண்ணி நித்திரைச் சாயலாக மரணம் எத்தனை விரைவாய் வரலாமென்றும், அப்போது உலக சுக வெகுமான எண்ணங்க ளெல்லாம் எவ்விதமாகுமென்றும் சிந்திப்பாய். சயன இளைப் பாற்றியால் கையில் சுவாமிக்குப் பணிபுரிய அதிகச் சக்தி உண்டாக உன் சயனத்தை அவர் அமல திருவுளத்திற்குத் தூய மனத்தோடு ஒப்புக் கொடு. நித்திரையிலே நீ விடும் சுவாசமெல்லாம் நித்திரை யற்ற பரம தூதரும் மற்ற பரலோக வாசிகளும் இடைவிடாது செய்யும் தோத்திரத்துக்கு ஒப்பாக வேண்டுமென்று விரும்பி, உன் இரட்சகருடைய திருக்கரத்தில் உறங்குவதாக எண்ணுவாய். சேசு மரியே சூசையே என் கடைசி அவஸ்த்தையில் எனக்கு உதவி செய்தருளும். 

நீ படுக்கையில் சென்றபின் நித்திரை வராவிட்டாலும் அல்லது கொஞ்சம் தூங்கியபின் நித்திரை அகன்றாலும் மறுபடி நித்திரை பிடிக்கிற வரையில் செய்யவேண்டியது: 

1 வது செபமாலை சொல்லுகிறது 

2 வது சாவு, தீர்வை, நரகம், மோட்சத்தைக் குறித்துத் தியானிக்கிறது 

3 வது உத்திரிக்கிறஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்களுக்கு வேண்டிக் கொள்ளுகிறது 

4 வது பொது அல்லது தனி ஆத்தும் சோதனை செய்கிறது 

5 வது சீவியத்தைச் சீர்ப்படுத்தி நித்தியத்தை உறுதி செய்துகொள்ளத் தகுந்த உபாயங்களை யோசிக்கிறது 

6 வது நரகத்தில் ஆத்துமாக்கள் படும் கொடிய உபாதனைகளை நினைத்துச் சேசுநாதர் பூங்காவனத்தில் கொண்ட ஆ கோர நடுக்கம் பயம் உபாதை களை நினைக்கிறது 

7 வது அர்ச்சியசிஷ்டவர்கள் சம்மனசுகளோடு தனிமையாய் இரூப்பதாக எண்ணி, அவர்களோடு சம்பாஷணை செய்கிறது 

8 வது தளங்களுக்குக் கர்த்தராயிருக்கிற தேவனே, நீர் பரிசுத்தர் பரிசுத்தராயிருக்கிறீர்; உமது மகத்துவம் பொருந்திய மகிமைப் பிரதாபத்தால் வானமும் பூமியும் சம்பூரணமாயிருக் கின்றன; என்னைப் படைத்த பிதாவுக்கும் என்னை இரட்சித்த சுதனுக்கும் எனக்கு ஆனந்த உபசாந்தியாகிய இஸ்பிரீத்துசாந்து வுக்கும் என்றென்றைக்கும் எல்லாப் படைப்புகளாலும் ஸ்தோத்திரம் உண்டாக்ககடவது. என் சீவிய கர்த்தாவே சேசுவே வாழி, என்னும் இப்படிப்பட்ட மனவல்லயச் செபங்களையும் செபிக்கவும். 

"அர்ச் கன்னிமரியம்மாளின் மாசில்லாத பரிசுத்த உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக."

"கன்னி மரியம்மாளே! நீர் உமது உற்பவத்தில் மாசில்லாமலிருந்தீர். நீர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாகிப் பெற்ற உமது சுதனாகிய சேசுவினுடைய பிதாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்"