கணவன் - மனைவியர் வேண்டிக் கொள்ளும் செபம்

சேசு கிறீஸ்து நாதருக்கும் திருச்சபைக்கு முள்ள நேச ஐக்கியத்தைப் போல உலகப் பரம்புதலுக்காகவும், அன்னியோன்னிய நேசத்துக்காகவும் பரிசுத்த மெய்விவாகத்தை அர்ச்சித்தருளின சர்வேசுரா! அதன் ஆசீர்வாதத்தின் வரத்தை இருவரும் வணக்கத்தோடே ஏற்றுக்கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும். எங்களுடைய ஐக்கியத்தை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லாக்கடமை களையும் சமாதானத்தோடும் சிநேகத்தோடும் பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடத்தவும் உம்மை மன்றாடுகிறேன். பிரியக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் பரிசுத்தக் கட்டைப் பலவீனப்படுத்தத்தக்க எவ்வித துஷ்ட குணத்திலும், கெட்ட கிரியையிலுமிருந்து என்னை விடுவித்தருளும். எப்படியாகிலும் என் சுய இஷ்டத்தையும், பிரியத்தையும் எதிர்த்து உமக்குப் பிரியப்பட நடக்கச் சுறுசுறுப்புள்ளவனாகவும், ஆசையுள்ள வனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முணுமுணுத்து, எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மைப் பூலோக வாழ்வினால் இழந்துபோய் மறுதலியாதிருக்கச் செய்யும். பொறுமையாலும், சாந்தகுணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்ப்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்கு யோக்கியம் உடையவனாயிருக்கச் செய்தருளும், ஆமென்.