பூச்சிகளால் அழிக்கப்படுகிற பயிர்களுக்குச் செபம்

வானமும், பூமியும் படைத்த சர்வேசுரனுடைய நாமத்தினால், எங்களுக்குச் சர்வ சகாயமும் நன்மையும் உண்டாவதாக.

மு - சுவாமீ, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்,

து - எங்கள் அபயசத்தம் உமது சந்நிதிமட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவரே! நாங்கள் செய்கிற வேண்டுதலை தேவரீர் தயாபக் கருணையால் கேட்டருள மன்றாடுகிறோம். அதேதெனில் எங்கள் பாவங்களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்தப் பூச்சிகளுடைய நெருக்கிடையை உமது கருணாகடாட்சத்தால் நோக்கி உமது திருநாமத்திற்கு புகழ்ச்சி உண்டாகும்படிக்கு அவைகளை நீக்கியருளும். அப்படியே இந்தத் துஷ்டப் பூச்சிகள் உமது ஆக்கினையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டு போகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும், இதில் உண்டாகிற பலனும் உமது பணிவிடைக்கும், எங்கள் பிழைப்புக்கும் பிரயோசனமாகவும் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திரு முகத்தைப் பார்த்துத் தந்தருளும், ஆமென்.