இஸ்பிரீத்துசாந்துவின் மந்திரம்

இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளிவாரும், உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும், அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும், உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.

பிரார்த்திக்கக்கடவோம் 

சர்வேசுரா சுவாமீ, விசுவாசிகளுடைய இருதயங்களை இஸ்பிரீத்துசாந்துவின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே, அந்த இஸ்பிரீத்துசாந்துவினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருளும். இவைகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிற சேசு கிறீஸ்துநாதருடைய திரு முகத்தைப் பார்த்துத் தந்தருளும். ஆமென். - ஒரு.பர.

ஆண்டவரே, நாங்கள் சரீரக் கற்புடனே உமக்கு ஊழியம் செய்யவும், இருதயச் சுத்தத்துடனே உமக்குப் பிரியப்பட நடக்கவும், உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவினுடைய அக்கினியினால் எங்களுடைய இருதயம் பற்றி எரியவும் தயைசெய்தருளும் சுவாமீ. எங்களுடைய கிரியை வார்த்தைகளெல்லாம் உம்மைக்கொண்டு துவக்கவும், உம்மிலே முடிக்கவும் வேண்டியதாகையால், நாங்கள் அதைச் செய்யத் துவக்குகிறதற்கு முன்னே உம்முடைய ஏவுதலைத் தந்தருளும், செய்யும்போது உம்முடைய அநுக்கிரகத்தைத் தந்து நடத்தும் ஆண்டவரே. ஆமென்