அர்ச்சியசிஷ்ட தேவமாதாவின் பிரார்த்தனை

சுவாமீ கிருபையாயிரும்... மற்றதும்.

அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறீஸ்துவினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவப்பிரசாதத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பழுதற்ற கன்னியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிசுத்தங் கெடாத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆச்சரியத்திற்குரிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நல்ல ஆலோசனை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிருஷ்டிகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரட்சகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா புத்தி உடைத்தான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா வணக்கத்திற்குரிய கன்னிகையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட தகுதியுடைவரான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சக்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தயையுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்மத்தினுடைய கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானத்திற்கு இருப்பிடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் சந்தோஷத்தினுடைய காரணமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகிமைக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோசாவென்கிற புஷ்பமே, எங்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீது இராசாவினுடைய உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாக்குத்தத்தத்தின் பெட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோகத்தினுடைய வாசலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விடியற்காலத்தின் நட்சத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறீஸ்துவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சம்மனசுகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்துதியருடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்சபையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச் செபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குருக்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சமாதானத்தின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற..... மற்றதும்.

முதல்: , சேசுகிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,

துணை: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக் கடவோம்.

சுவாமீ! முழு மனதோடே தெண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்போதும் பரிசுத்த கன்னிகையான முத்திப்பேறுபெற்ற மரியாயுடைய வேண்டுதலினாலே சகல சத்துருக்களின் பொல்லாப்புக்களுக்கு எதிராய் பிரசன்னராய்த் தயைசெய்து இரட்சியும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்சேசு.

சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும், ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துகளிலே நின்று எங்களைத் தற்காத்துக்கொள்ளும்.

முதல்: அர்ச். கன்னிகையே, நான் உம்மை ஸ்துதிக்கக் கிருபை செய்தருளும்.

துணை: உம்முடைய சத்துருக்களை வெற்றிகொள்ள எனக்குப் பலத்தைத் தந்தருளும். 

முதல்: தேவன் தமது அர்ச்சியசிஷ்டவர்களில் ஆசீர்வதிக்கப் பட்டவராயிருக்கிறார்.

துணை: ஆமென்.