சயன ஆராதனை

சர்வேசுரா சுவாமீ! மனுஷர் சயனத்தால் இளைப்பாற இராத்திரி காலம் கட்டளையிட்டருளினீரே, உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. இன்றெனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் உமக்குத் தோத்திரம் செய்து, என்னால் செய்யப்பட்ட பாவங்களை எல்லாம் பொறுத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றேன். அவைகள் தேவரீடைய அளவில்லாத மகிமைக்கும் நன்மைத்தனத்திற்கும் விரோதமா யிருக்கிறதினாலே முழுவதும் அவைகளை வெறுக்கிறேன். இந்த இராத்திரியிலே திடீர் மரணத்திலும் துர்க்கனவு முதலான பசாசின் சோதனைகளாலும் அடியேனுக்கு மோசம் வரவொட்டாமல் காத்துக் கொள்ளும். ஆ என் சேசுவே! என் மரண வேளையிலே இஷ்டப்பட்டு உமது சிலுவையை ஆவலோடு தழுவி உயிர் விடவும், உமது ராச்சியத்தில் உம்மோடே நிரந்தரம் அடியேன் இளைப்பாறவும் கிருபை செய்தருளும் ஆமென்.