மேலான உத்தம மனஸ்தாப மந்திரம்

பராபர வஸ்துவாயிருக்கிற சர்வேசுரா சுவாமீ! தேவரீர் ஆண்டவர், நான் நீசனாயிருக்கிற அடிமை, இவ்வடிமை அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற தேவரீரைச் சட்டை செய்யாமல் தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே சுவாமீ! தேவரீருக்கு ஏற்காத துரோகங்களை நினைத்தேனே சுவாமீ! நான் செய்த பாவங்களினாலே சேசுநாதரே, தேவரீரைச் சிலுவையிலே அறைந்தேனே சுவாமீ! தேவரீருடைய திருக் காயங்களை நிஷ்டூரமாக அநேகமுறை நோகச் செய்தேனே சுவாமீ! தேவரீர் பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைகிறதற்குப் பாவி நான் காரணமாயிருந்தேனே சுவாமீ! நான் செய்த பாவங்களினாலே என் ஆத்துமத்தைக் கெடுத்துப் பசாசுக்கு அடிமையாய்ப் போய் நரகப் பாதாளத்திலே விழுந்து என்றென்றைக்கும், எப்பொழுதும் எப்பொழுதும், ஊழியுள்ள காலம் ஆறாத நெருப்பில் அவியாத கட்டையாய்க் கிடந்து வேகிறதற்கு என் பேரிலே அளவில்லாத கடனைச் சுமத்திக் கொண்டேனே சுவாமீ! இதனாலே நரகத்திற்குப் போவேன் என்கிற பயத்தை விடவும், மோட்சத்தை இழந்துபோவேன் என்கிற சேதத்தை விடவும் அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற தேவரீரைச் சட்டை செய்யாமல் தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேன் என்கிறதினா லேயும், தேவரீருக்கு ஏற்காத துரோகங்களை நினைத்தேன் என்கிற தினாலேயும் மிகவும் மனநொந்து உத்தம மனஸ்தாபமாயிருக் கிறேன். எனக்கிதுவே மனஸ்தாபமில்லாமல் வேறெ மனஸ்தாப மில்லை. இதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இந்தப் பாவங்களை எல்லாம் அறிந்து செய்தேன், என் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. அறிந்தே செய்தேன், என் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. அறிந்தும் துரோகமாய்ச் செய்தேன், என் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமீ. இனிமேல் ஒருக்காலும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்கிறதில்லையென்று உறுதியான மனதோடே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் என் பலன் போதாதென்கிறதினாலே, சேசுநாதசுவாமீ பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தத்தின் பலன்களைப் பார்த்து, என் பாவங் களை எல்லாம் பொறுத்து எனக்கு உமது வரப்பிரசாதங்களையும் மோட்சபாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழு மனதோடே நம்பியிருக்கிறேன். 

முதல்: இவைகள் எல்லாம் என் பலத்தினாலே கூடாதே, அர்ச். தேவமாதாவே எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.

துணை: ஆண்டவராயிருக்கிற சேசுகிறீஸ்துவே, உலகத்தினுடைய பாவங்களைப் போக்குகிறவரே எங்கள் பேரில் தயவாயிரும்.

இப்படி மூன்று விசை சொல்லுகிறது. 

அதற்குப்பின் கர்.அருள்.விசுவாச மந்திரம் சொல்லவும்.