பிரேதம் எடுத்துக்கொண்டு போகையில்

பிரேதம் எடுத்துக்கொண்டு போகையில் சொல்லத்தக்க வீரமாமுனிவர் பாடிய தேவாரம் கருணாம்பரப் பதிகம்

மூவாமுதலா முற்றிணையா மூவாளாயோர் மெய்ப் பொருளாய்த் தாவாநயனாய்த் தயைக்கடலாய்த் தானாய்த் தனி முத்தொழிற்பரனாய்க் காவாநின்றென் னுளத்தரசாய்க் கருணாம் பரமா யாதிபரா, ஆவாயுனனை அனைவருமுன் னலர்த்தாட் பணியாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (1)

நேராநினையிற் றன்வயத்தாய் நெடுங்காற் கடந்தேயென்று முளாய்ச் சூராருடல் செய் யுருவிலனாய்த் தொக்கநன்மை யாவுமுளாய் பேராதணுகா தெங்குமுளாய்ப் பின் மூவுலகோர் காரணனா, யோராதிவற்றை யுலகெல்லா முன்றாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (2)

வான்கொள் ளொளி செய் சுடர்படைத்தி மண்கொள் பல நல்லுயிர் படைத்தி, நான்கொள் கனியோ டலர்படைத்தி கதிர் கொண்மணியோ டணிபடைத்தி யான்கொள் ளெவையு நீ படைத்தி யிவைசால்பன்றென் றுனைத்தந்தி, யூன்கொள்ளுரு நீயாயின பின்னுன்றாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (3)

தனிமைத் தலைமை யுவதென்பார் தயையின் மிக்குள்ளன் புணர்ந்தோர், இனிமைத் தலைமை யுனதென்பாரிணையாச் சீர் கொள்ளுன் குணத்தாற் கணிகைத்தலைமையுனதென்பார் கவினே களியே யுனையென்பார், நனிமெய்யிஃதா யனைவருமுன்னற்றாட் பாணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (4)

பொருளே செய்தப் பொருளினுமுட் புணர்ந்தப் பொருள் கெட்டழியாய்நீ, யருளே புரிந்து செய்பொருளா லாமோர் பயனும் வேண்டாய்நீ, மருளேயறியாய் தயைமறவாய் மாறாநட்பெம் மேலொழியா, யிருளேமிக வீ துண ராவுன் னிணைத்தாட் பணியாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (5)

சுவையேயூட்டி யளிப்போய் நீ தொன்னோய் மாற்று மருந்தோய்நீ, நவையே நீக்கிக் களிப்போய் நீ நசையேயாற்று மினியோய்நீ, யவையே புகழி னுயர்ந்தோய்நீ யமரர்புகழப் படுவோய்நீ, யிவையே யுண்டாய்ப் பின்னுலகுன் ணிணைத்தாட் பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (6)

ஒளியே நலதே லிவ்வொளியை யொளித்துக் கடந்த வொளியோய் நீ, களியேநலதே லாசையறக் கசடற்றொழியாக் களியோய்நீ, தெளியே வருநூற் கலைநலதேற் றிறநூலுணர்த்துந் தெளியோய்நீ, வெளியேயிவையோர்ந் தனைவருமுன் மென்றாட் பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (7)

கானார்மலர்பெய் துன்றிருத்தாட்கருத்திற்கொள்வார் துயர் கொள்ளார், நானாவழியே நனிவாழ்வார் நயமும்புகழு மிக்கனபின், வானார்பயன்கொள் வாரென்றாய் மாறாமெய்யிஃதாகியிவண், டேனாரின்ப நக்குவருன் றிருத்தாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (8)

மலையே யுன்னல்லானிலையா மதுவேயமுதே கொல்நெஞ்சாங், கலையேவெளிறா மொளியிருளாங் களியேதுன்ப மாந்திருவி, னலையேவற்றி னல்குரவா மடலேவலியே குறையாமிந், நிலையேயாகி யுலகெல்லா நின்றாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (9)

கார்சேர்மின்னே யிங்கிளமை கடல்சேர் திரையே யிங்குடைமை, நீர்சேர் நுரையே யிங்கினிமை நிசிசேர் நுளம்பேயிங் கொளிமை, சீர்சேருன்னைச் சேர்ந்தவர்க்கே திறம்பா வொழியா வாழ்வுளதாம், பார்சேரெவரு மிஃதறிந்துன் பனித் தாட்பணி யாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (10)

வல்லாரில்லை யுனையல்லால் வாழாரில்லை யுனைச் சேர்ந்தா ரில்லாரில்லை நீயிரங்க விவணீமுனியக் கெடாரில்லை, செல்லார் வானோர் தொழுதேத்தும் சொல்லற் கரிய வுன் பெருமை, கல்லாருண்டோ பின்புல குன் கவின் றாட் பணியாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (11)

வான்மே லமர ரத்தனையு மண்மேலரச ரத்தனையும், நூன்மே லுயர்வோ ரத்தனையு நுண்மாண் பறிவோ ரத்தனையும், கான்மேன் முனிவ ரத்தனையுங் கன்னிமடவா ரத்தனையும், மேன்மேலிறைஞ்ச மற்றுலகுன் மென்றாட் பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (12)