வயது சென்றவர்கள் செபிக்கத்தக்க செபம்

ஆண்டவரே! என் காலங்களெல்லாம் என்ன வகையாய்ப் போனதென்று அறியேன். இப்போதுதான் பிறந்து விளையாடிக் குடித்தனக் காரியங்களைச் செய்துகொண்டிருந்ததாக என் ஞாபகத்திலிருக்கிறது. இந்தச் சொற்ப காலத்தில் எத்தனை யோமுறை என் வாக்கினாலும், கிரியைகளினாலும், வீணாசை களினாலும் உமக்குத் துரோகம் செய்தேன். இப்போது எனக்குக் கல்லறை கிட்டிவருகிறது. பயங்கரமான நடுத்தீர்வையிலே என்ன சொல்லப்போகிறேன் என்று பயப்படுகிறேன். நான் செய்த பாவங் களினாலே என் புத்தி சித்தமானது அழுக்கடைந்து போயிருப் பதால், கடைசிக் காரியங்களைத் தெளிவாய்ச் சரியாய் யோசித்துத் தியானிக்க முதலாய் அறியேன். ஆகையால் தேவரீர் என்பேரில் கிருபை கூர்ந்து நான் சாகுமுன் என் பாவங்களை நினைத்து அழுது பிரலாபித்து அவைகளுக்கான தபசு செய்து உமது நீதிக்கு உத்தரித்து நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து அவஸ்தைப் பூசுதலைப் பெற்று நல்ல மரணம் அடைய அநுக்கிரகம் செய்தருள உம்மை மன்றாடுகிறேன், ஆமென்.