பாஸ்கு காலத்தின் திரிகாலச் செபம்

இது பெரிய சனிவாரம் துவக்கி அர்ச். தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் சொல்லக்கத்தக்கது.

பரலோகத்திற்கு இராக்கினியே மனங் களிகூரும். அல்லேலூயா

அதேனெனில், பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர்.  அல்லேலூயா.

திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார்.  அல்லேலூயா.

எங்களுக்காகச் சர்வேசுரனை மன்றாடும்.  அல்லேலூயா.

முதல்: எப்பொழுதும் கன்னிகையான மரியாயே, அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர்  அல்லேலூயா. 

துணை: அதேனெனில், ஆண்டவர் மெய்யாகவே உத்தானமாயினார்.  அல்லேலூயா.

பிரார்த்திக்கக்கடவோம். 

சர்வேசுரா சுவாமீ, உம்முடைய திருக்குமாரனுமாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுகிறிஸ்துவின் உத்தானத்தினாலே உலகங் களிக்கச் சித்தமானீரே, கன்னிமரியாள் ஆகிய அவருடைய திருத் தாயாராலே நித்திய சீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுக் களை எல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.