மனைவியின் செபம்

அர்ச். தேவமாதாவே! நீர் அர்ச். சூசையப்பரோடு வாசம் பண்ணும்போது அவரது மனங் கோணாமல் நடந்துகொண்டீரே, ஏவையினுடைய மாசு தங்காத நீர் இப்படி நடந்தீரே, உன் கணவனுக்குக் பணிந்திருப்பாயென்று ஏவைக்கு விதித்த நிபந்தனை என்பேரில் இருக்குதே. ஆகையால் நான் இராக்கேலைப் போல் கணவன் சிநேகத்துக்கு உரியவளாயும், இரெபெக்காளைப்போல் சமுசார தொந்தரவுகளில் விவேகமுள்ளவளாகவும், சாரா என்பவளைப் போல் எல்லாவற்றிலும் பிரமாணிக்கமுள்ள வளாகவும் இருக்க உமது திருக்குமாரனை மன்றாடும். மேலும், என் மாமனார், மாமியார் முதலான பெரியவர்களாலேயும், மற்றவர்களாலேயும் நேரிடும் துன்ப துரிதங்களைப் பொறுமை யோடு சகிக்கவும், பிள்ளைகளாலே வரப்பட்ட சஞ்சலங்களை ஒறுப்போடு பொறுக்கவும் வேண்டிய வரப்பிரசாதங்களை எனக்குப் பெற்றதுத் தந்தருளும், ஆமென்.