விசுவாச மந்திரஞ் சொல்லுகிற பொழுது

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன் / வானமும் பூமியும் / காண்பவை காணாதவை யாவும் படைத்த / எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய்ச் செனித்த / ஒரே ஆண்டவர் யேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன் / இவர் யுகங்களுக்கெல்லாம் முன்பே / பிதாவினின்று செனித்தார் / கடவுளினின்று கடவுளாக | ஒளியினின்று ஒளியாக! மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாக செனித்தவர் / இவர் செனித்தவர் உண்டாக்கப்பட்டவர் அல்லர் / பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன மானிடரான நமக்காகவும் / நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார் / பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாயிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார் / மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் / சிலுவையில் அறையுண்டு / பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார் / வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் / வானகத்திற்கு எழுந்தருளி / பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார் / சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க / மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார் / அவரது அரசுக்கு முடிவே இராது / பிதாவினின்றும் சுதனினின்றும் புறப் படும் ஆண்டவரும், உயிரளிப்பவருமான / பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன் / இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக / ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார் / தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே / ஏக / பரிசுத்த / கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் / திருச்சபையையும் விசுவசிக்கிறேன் / பாவமன்னிப்புக்கான / ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் / மரித்தோர் உத்தானத்தையும் / வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.