பூசைக்கு முன் ஆயத்தச் செபம்

கருணை நிறைந்த பிதாவே! இரக்கம் நிறைந்த கர்த்தாவே! பாவத்தால் கெட்டழிந்த மனித சந்ததியை மீட்டு இரட்சிக்கும் படி, உமது ஏக சுதன் முன்னொரு நாள் கொடிய வேதனைப் பட்டுச் சிலுவையில் உயிர் விடத் திருவுளமானதுமல்லாமல், அவர் அன்று சிலுவையில் உமக்கு ஒப்புக் கொடுத்த வலியைத் தேவரீர் என்றும் மறவாதிருக்கவும், நாங்கள் அதனால் அடைய வேண்டிய பலனை இடைவிடாமல் அடையவும் திருவுளமாகி, இந்தப் பூசைப் பலி எந்நாளும் திருச்சபையில் ஒப்புக்கொடுக்கப்படும் படிச் சித்தமானீர் அல்லவோ! உமது மட்டற்ற வல்லபமும் அளவற்ற ஞானமும் குறையற்ற நன்மைத்தனமும் விளங்குகிற ஆச்சரியமான இந்தப் பூசையில், அடியோர் சமாதானத்தோடும் பய பக்தியோடு மிருக்கவும், உதிரஞ் சிந்தாத இந்தப் பலியைக் கொண்டு, உதிரப் பலியின் பேறுகளைக் குறையில்லாமல் கைக் கொள்ளவும் அநுக் கிரகம் செய்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். ஆ! மட்டற்ற பிரதாபம் உடைத்தான பிதாவே! அடியேன் தேவரீருடைய கிருபாகடாட்சத்துக்கு அபாத்திரவானாயினும் உம்முடைய நேச குமாரன் எனக்காகச் சிந்தின விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து, எனக்குத் தயை செய்தருளும். ஆராதனைக்குப் பாத்திரமான கர்த்தாவே! உமது திவ்விய பூசையின் பலியைக் காண வேண்டுமென்று, உமது பீடத்தை அண்டி வருகிறேன். இந்தத் திவ்விய பலியினால் அடியேனுக்கு வர வேண்டுமென்று தேவரீர் சித்தமாயிருக்கிற நன்மைகள் யாவையும் நான் குறைவில்லாமல் அடையவும், அதற்கு என்னிடத் திலுள்ள குற்றங்களை மாற்றவும் தேவரீர் சித்தம் வைத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.

தேவரீருடைய இனிய கருணையைப் பெற என் இருதயத்தைத் தக்க தாக்கி எனது பொறிகள் போகும் வழி விடாமல் நிறுத்திப் பாவியான அடியேனுடைய பாவங்களை உமது திரு உதிரத்தால் போக்கி, என் ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்தியருளும். தயாபரரான் சர்வேசுரா! தேவரீர் அடியேனுடைய பாவங்களைப் பாராட்டா தேயும். ஏனெனில் தேவரீருக்கு பொருந்தாது என்கிறதினாலே இவைகளை முழுவதும் வெறுத்துத் தள்ளுகிறேன். யாராகிலும் எனக்குப் பொல்லாப்புச் செய்திருந்தால் அவர்களுடைய குற்றங்களை நான் நல்ல மனதோடு பொறுத்துக் கொள்ளுகிறேன். தேவரீரும் அடியேனுடைய பாவங்களைப் பொறுத்தருள வேண்டுமென்று மகா தாழ்ச்சியுடன் வேண்டிக் கொள்ளுகிறேன். என் மதுர சேசுவே! தேவரீர் அடியேனுக்காக முழுதும் உம்மைப் பலியாகத் தந்தீரே, அவ்வண்ண மாய்த் தேவரீருடைய திருவுளத்தோடு என் கருத்தையும் ஒன்றுபடுத்தி, அடியேனை முழுதும் உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்.