சிறுவர்கள் தாய் தந்தையருக்காக வேண்டிக்கொள்ளும் செபம்

சுவாமீ! என் தாய் தந்தையரை உமது நேசத்தினுடையவும், வல்லமையினுடையவும் சாயலாக உண்டாக்கி என்னை எல்லாவற்றிலும் அவர்களுக்கு கீழ்ப்படியவும், அவர்களை நேசிக்கவும் கட்டளையிட்டீரே, சர்வத்துக்கும் வல்லவரான சர்வேசுரா! உமது கற்பனையை ஆசையோடும் முழு இருதயத் தோடும் நான் கைப்பற்ற எனக்கு உமது வரப்பிரசாதத்தைத் தந்தருளும். நான் அன்போடு அவர்களை நேசிக்கவும், கனஞ்செய்யவும் அவர்களுடைய கட்டளைக்குச் சாக்கிரதையுடன் கீழ்ப்படிந்து அவர்களுடைய இஷ்டத்துக்கு இணங்கி நடக்கவும், அவர்களுடைய நலத்தை ஆ சிக்கவும், அவர்களுடைய கண்டனங்களைத் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் சகித்துக் கொள்ளவும் எனக்கு உதவி செய்தருளும். ஓ தேவனே! அகங்காரத் திலும், கலகத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலும், சோம்பலிலும், அசட்டைத் தனத்திலுமிருந்து என்னை விடுவியும். என் எல்லாப் படிப்பினைகளிலும், வேலைகளிலும் என்னைச் சுறுசுறுப்பு உடையவனாகவும், சோதனைகளில் பொறுமையுடய வனாகவும் செய்தருளும். நான் அப்படியே என் சீவிய காலத்தில் இருப்பேனாகில், என் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதர் மூலமாக உமது பிள்ளை யென் கிற பெயருக்குப் பாத்திரமுள்ளவனா யிருப்பேன், ஆமென்.