கிருபை தயாபத்து மந்திரம்

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க, எங்கள் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க. பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாபமுள்ள திருக் கண்களை எங்கள் பேரிலே திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசங் கடந்தபிற்பாடு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுநாதருடைய, பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும், கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே, 

முதல்: அர்ச். கன்னிகையே நான் உம்மை துதிக்கக் கிருபை செய்தருளும். 

துணை: உம்முடைய சத்துருக்களை வெற்றிகொள்ள எனக்கு பலத்தைத் தந்தருளும். 

முதல்: தேவன் தமது அர்ச்சியசிஷ்டவர்களில் ஆசீர்வதிக்கப் பட்டவராயிருக்கிறார். 

துணை: ஆமென்சேசு.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா, முத்திப்பேறுபெற்ற கன்னித்தாயான மரியாயுடைய ஆத்துமமும் சரீரமும் இஸ்பிரீசாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு தகுதியுள்ள பீடமாயிருக்க ஏற்கனவே நியமித் தருளினீரே, அந்தத் திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவருடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும், நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்குக் கிருபை கூர்ந்தருளும்.. இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசு நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.