பாவசங்கீர்த்தன மந்திரம்

சர்வத்திற்கும் வல்ல சர்வேசுரனுடனேயும், எப்பொழுதும் கன்னியாயிருக்கிற முத்திப்பேறுபெற்ற மரியாயுடனேயும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலுடனேயும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பருடனேயும், அப்போஸ்தலர்களாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பருடனேயும் சின்னப்பருடனேயும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடனேயும் (எனக்குக் குருவாயிருக்கிற உம்முடனேயும்) பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ளுகிறேன்; அதேனென்றால், என் சிந்தனையினாலேயும், வாக்கினாலேயும், கிரியையினாலேயும் மகா பாவங்களைச் செய்தேனே, என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே ஆகையால் எப்பொழுதும் கன்னியாயிருக்கிற முத்திப்பேறுபெற்ற மரியாயையும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலையும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பரையும், அப்போஸ்தலர்களாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட இராயப்பரையும் சின்னப்பரையும் சகல அர்ச்சியசிஷ்டவர்களையும் (எனக்குக் குருவாயிருக்கிற உம்மையும்) நம்முடைய கர்த்தராகிய சர்வேசுரனிடத்திலே எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆமென்.