நன்றியறிந்த தோத்திரம்

சர்வேசுரா சுவாமீ, என்னை ஒன்றுமில்லாதிருக்கையிலே மனுஷனாக உண்டாக்கினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

நான் செய்த பாவங்களினாலே நரகத்திற்குப் போகக் கடன் உண்டாயிற்றே, அந்தக் கடனை என்னால் உத்தரிக்கக் கூடாதென்று தேவரீர் மனுஷனாகப் பிறந்து பாடுபட்டு உத்தரித்தீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

அந்தப் புண்ணிய பலன்களை எல்லாம் ஞானஸ்நான முகாந்தரமாக எனக்குத் தந்தருளினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. -

நான் ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு அநேக முறை பாவங் களைச் செய்தேனே, அந்தப் பாவங்களை எல்லாம் பாவசங்கீர்த்தன முகாந்தரமாகப் பொறுத்து என்னை நரகத்திலே தள்ளாமல் மோட்சத்திற்குப் போகிற வழியில் நடத்திக்கொண்டிருக்கிறீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.

நீர் இன்றெனக்கு எண்ணிறந்த உபகாரங்களைச் செய்த தல்லாமலும் பசாசு எனக்கு நினைத்திருந்த அநேக பொல்லாப்பு களை விலக்கினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவது.

நான் இன்று செய்த பாவங்கள் எல்லாம் என் நினைவிலே வரவும், அவைகளுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும் உம்முடைய உதவியை கட்டளை செய்தருளும் சுவாமீ.

போன ஆத்தும் சோதனை தொடங்கி இந்நேரமட்டும் சிந்தனை வாக்குக் கிரியையினாலே செய்த பாவங்களை எல்லாம் பத்துக் கற்பனைப் பிரகாரமாக நினைத்துக் கொள்ளத்தக்கதாகப் பத்துக் கற்பனையும் திருச்சபை கட்டளையும் சொல்லி ஆத்தும் சோதனை செய்து பாவசங்கீர்த்தன மந்திரம் சொல்லவும்.