சிறு பிள்ளைகளின் செபம்

என்பேரில் வைத்த நேசத்திற்காக நித்திய ஞானத்தைச் சிறு பிள்ளையின் பலவீனத்திற்குள் மறைத்த அன்பு நிறைந்த சேசுவே! என் எதிர்காலத்திற்கு உமது ஆசீர்வாதத்தை கிரகிக்க நான் என் இளமைப் பருவத்தை எப்படி பரிசுத்தப்படுத்த வேண்டு மென்று உமது பரிசுத்த இளமைப் பருவத்தில் எங்களுக்குக் காண்பித்ததற்காக நான் தாழ்ச்சியோடு நமஸ்கார வந்தனம் செய்கிறேன். உமது பயத்தையும், நேசத்தையும் எங்கள் இருதயத்திற்குள் பிரவேசிக்கச் செய்து, அதனால் நீர் எங்களுக்குக் காட்டிய பாவனையில் நாங்கள் பிரயோசனப்படும்படி உம்மை மன்றாடுகிறேன். மேலும் நான் இவ்வுலகத்தில் வந்த ஒரே ஒரு முடிவின் படியே உமக்கு உழியம் செய்கிறதை விட, வேறே எந்தவிதத்திலும் என் சீவயகாலத்தின் நாட்களில் ஒரு நாள் அல்லது ஒரு மணிநேரமாகிலும் வீணாகப் போகவிடாதேயும். வணக்கத்துக்குரிய சேசுவே, நீர் என் இருதயத்தை ஆசையோடு கேட்கிறபடியால் நான் என்றென்றைக்கும் அதை உமக்கே வசீகரம் செய்கிறேன். அதை உமது திரு இருதயம்போல் மாற்றி உமது நேச அக்கினியால் எரித்தருளும். அந்த இருதயம் பாவத்தால் பல வீனமாகாதபடிக்குப் பாவத்தின் பயங்கரத்தை அதில் பதியவைத்து, உமது பரிசுத்த பாலத்துவத்தின் புண்ணிய பலன்களையும், சாந்தத்தையும், பரிசுத்தத்தையும், சிரவணத்தையும் சிநேகத்தையும் அதிலே ஏவும்படி உம்மை மன்றாடுகிறேன். நீர் உமது பரிசுத்த மாதாவுக்கு கீழ்ப்படிந்து நடந்ததுபோல, நான் என் பெரியோருக்கு மாறாத கீழ்ப்படிதலால் சங்கை செய்ய ஆசையாயிருக்கின்றேன். நீர் பூலோகத்திலிருக்கும்போது நீர் செய்த சொற்ப காரியம் முதலாய் அளவற்ற மேலாக உயர்த்தப்பட்டதே, அந்த பரிசுத்தமும் தெய்வீகமுமான கருத்தோடு நான் செய்யும் எல்லாக் கிரியைகளையும் உமது கருத்தோடு ஒன்றாய்ச் சேர்த்து உம்மோடு ஒப்புக்கொடுக்கிறேன். உமது சிறுவயதில் நீர் செய்த தாழ்ச்சியுள்ள பிரயாசையான வேலைக்குச் சங்கையாக என் சிறிய கிரியைகளையும் படிப்பையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். ஓ பரிசுத்த சேசுவே! உமது அபாத்திரப் பிள்ளையாகிய என்னை உமது ஆதரவில் வைத்துக்கொள்ளும். உமது சத்துராதியாயிருக்கிற இவ்வுலகத்தின் சோதைைனயிலும் ஆபத்திலுமிருந்து என்னைக் காப்பாற்றி என் எல்லாக் கிரியைகளையும், நினைவுகளையும், வார்த்தைகளையும், விருப்பங்களையும் உமது மகிமைக்கே நடத்தியருளும், ஆமென்.