பிரயாணத்திற்கு அல்லது வீட்டிலேயிருந்து புறப்படுகிறபொழுது

என் ஆண்டவரே, அடியேன் வீட்டிலே நின்று புறப்படுகிற இந்தப் பிரயாணத்தில் (அலுவலில்) சகல ஆபத்துகளினின்று என்னைத் தற்காத்து உமது அடைக்கலத்திற்குள் வாசமாயிருக்கச் செய்து, நினைத்த நற்காரியத்தைச் சுலபமாக்கி மோட்ச வழி தவறாமல் நடக்கத்தக்கதாகக் கிருபை செய்தருளும். ஆமென்.