கர்ப்பிணிப் பெண்கள் செய்யத்தகும் செபம்

கன்னியும் தாயுமான பரிசுத்தமரியே! நீர் சேசுநாதரை உமது திருவயிற்றில் தாங்கிக்கொண்டிருந்த நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய்ப் பேறுகாலமானபோது வாக்குகெட்டாத உந்நத பரவசத்தில் பிரவேசித்துத் திவ்விய பாலனைப் பெற்றீரே. அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும். நானோ பாவத்தில் பிறந்து சகலமான உபத்திரவங்களுக்கும் உள்ளாகியிருக்கிறேன். ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரில் இருக்கிறது. ஆகையால் என் துன்பத்தைப் பார்த்து, என் பலவீனங்களின் பேரில் இரக்க மாயிருந்து என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப் பின்றிக் கொஞ்சம் லேசான வேதனையோடு பிரசவிக்க அநுக்கிரகம் செய்தருளும். மேலும் அந்தச் சிசுவுக்குப் புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும் உம்முடையவும் ஊழியத்திலே அது நிலை கொண்டு பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும், ஆமென்.